இந்த மனித உருவ விலங்குகளை என்ன செய்தால் தகும் ?
எக்ஸ்பிரஸ் செய்தி படிக்க!
இவ்வரக்கர்கள் அனைவருக்கும் மகள்கள் உள்ளனர்!
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்
எக்ஸ்பிரஸ் செய்தி படிக்க!
இவ்வரக்கர்கள் அனைவருக்கும் மகள்கள் உள்ளனர்!
பதிவர்
enRenRum-anbudan.BALA
பதிந்த நேரம்
2/18/2005 11:46:00 AM
Labels: எ.அ.பாலா கருத்து
6 மறுமொழிகள்:
நீங்கள் அளித்துள்ள சுட்டியில் செய்தி ஏதுமில்லை. இந்தச் சுட்டி யிலுள்ள செய்தியைத்தானே சொல்கிறீர்கள் ?
மேலும் இந்தத் தளத்தைப் பார்வையிட பயனர் பெயர்/கடவுச் சொல் அவசியம்.
ரோஸாவசந்த் சிம்புவுக்கு அளிப்பதாகச் சொன்ன தண்டனையைத் தரலாம்.
ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பாக இது போன்ற ஒரு குற்றவாளியுடன் சிறிது நேரம் பேசிய போது, கண நேரம் உணர்ச்சிவசப் பட்டதால் கண்ணியமிழந்து முட்டாள் தனமாய் செயல்பட்டுவிட்டதாக கூறினான்.
மருத்துவ/உளவியல் ரீதியாக, இது போன்ற குற்றங்கள் குறைய உணர்ச்சியை மட்டுப்படுத்தக் கூடிய மருந்துகள், ஆலோசனைகள் நடத்தலாம்.
என்ன செய்தாலும் இது போன்ற குற்றவாளிகள் தாங்களாகவே தவறு செய்யுமுன் உணர்ந்து திருந்தினால் ஒழிய வேறெந்த வழியிலும் இவ்வகைக் குற்றங்களைத் தடுக்க முடியாது
கோபி,
//நீங்கள் அளித்துள்ள சுட்டியில் செய்தி ஏதுமில்லை. இந்தச் சுட்டி யிலுள்ள செய்தியைத்தானே சொல்கிறீர்கள் ?
//
The LINK is working now! Thanks!
//ரோஸாவசந்த் சிம்புவுக்கு அளிப்பதாகச் சொன்ன தண்டனையைத் தரலாம்.
//
இது தான் முதலில் என் நினைவுக்கு வந்தது! இதைப் போன்றும் / விடவும் அதிக (துரித) தண்டனை நடைமுறைக்கு வருவதால், இவ்வகை குற்றங்கள் நிச்சயம் குறையும் என்பது என் ஆணித்தரமான எண்ணம். அதற்கு, இவ்வகை குற்றங்கள் குறித்த வழக்குகள் விரைவாக (தனிப்பிரிவாக) நடத்தப்பட்டு, தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும். Also, Repetitive Appeals must not be allowed in such cases!
என்றென்றும் அன்புடன்
பாலா
ரோசாவசந்த் ட்ரீட்மெண்ட் எல்லாம் ஒரு நாளில் முடிந்துவிடும். அது வேலைக்காது. இவர்களை சவுதியில் செய்வது போல் நடு ரோட்டில் நிற்க வைத்து, கல்லால் அடித்து உயிரோடு இருக்கவிடல் வேண்டும். மருத்துவம் செய்து, மீண்டும் நடுரோட்டில் நிற்கவைத்து கல்லால் அடிக்கவேண்டும். மனித உரிமை மீறல் என்று சொல்வீர்கள், மனிதர்களாய் இருந்தால் தான் மனித உரிமை மீறல் என சொல்லலாம்.
ஒரே முறை ***** கட் செய்வதோ அல்லது மரண தண்டனை அளிப்பதோ சித்ரவதையின் இறுதியாக போய்விடும். இவர்களுக்கான தொடர் தண்டனையில் இப்படி நினைக்கும் சில கயவர்கள், சுய இன்பம் பெறக் கூட தங்களுடையதை தொட அஞ்ச வேண்டும். அப்படி செய்தாலேயொழிய, இவ்விதமான குற்றங்களுக்கு முடிவில்லை.
//மருத்துவ/உளவியல் ரீதியாக, இது போன்ற குற்றங்கள் குறைய உணர்ச்சியை மட்டுப்படுத்தக் கூடிய மருந்துகள், ஆலோசனைகள் நடத்தலாம். //
போய்யா.... இவனுங்களுக்கா...அந்தாளு ப்ளான் போட்டு, ரூம் புக் பண்ணி, மிரட்டல் வைச்சு செஞ்சிருக்கான், அவனுக்கு போயி, உளவியல்/மனவியல்-னு வியாக்யானம் பேசிக்கிட்டு. அதெல்லாம் வேலைக்கு உதவாது.
தீயில கைவெச்சா சுடும்ன்னு பளிச்சுனு தெரியறமாதிரி தண்டனைகள் இல்லாம சும்மா ஆலோசனைகள் குடுக்கறதுனால திருந்துவானுங்கன்னு தோணல.
//போய்யா.... இவனுங்களுக்கா...அந்தாளு ப்ளான் போட்டு, ரூம் புக் பண்ணி, மிரட்டல் வைச்சு செஞ்சிருக்கான், அவனுக்கு போயி, உளவியல்/மனவியல்-னு வியாக்யானம் பேசிக்கிட்டு. அதெல்லாம் வேலைக்கு உதவாது.//
Narain,
இந்தச் செய்தியில் சம்பந்தப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் விஷயத்தில் நீங்கள் சொல்வது மிகச்சரி.
ஆனால் நான் சந்தித்த குற்றவாளி விஷயத்தில் நடந்ததற்கு சந்தர்ப்பமும் உணர்ச்சியும் முக்கியமான காரணங்கள்.
அவன் மனநல ஆலோசனையோ அல்லது உணர்ச்சி மட்டுப்படுத்தும் வில்லைகளோ எடுத்துக் கொண்டிருந்தால் அந்தக் குற்றத்தையும் விளைவுகளையும் தடுத்திருக்கலாம்.
இப்பட்டிப்பட்டவர்களிற்கு நியாயமான தண்டனையை மனைவி பிள்ளைகள் தான் கொடுக்க வேண்டும். இவர்கள் எல்லாம் இந்த உலகத்தில வாழ்ந்து என்ன செய்யப்போறார்கள். தலையிடியும் காச்சலும் தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள் அவர்களது பிள்ளைகளிற்கு இந்த நிலை வந்தால் எனினும் இவர்கள் திருந்துவார்கள் என்பது சந்தேகம் தான். மனித உருவில் நடமாடும் மனித மிருகங்கள்.
:evil: :twisted:
Post a Comment